நானென்பது எதுவென
நானென்பது எதுவென
கவிதை பக்கம்
நானென்பது எதுவென
ஒருமுறைகூட அறிந்திருக்கவில்லை
இதுவரையிலும்...
யாரோ சிரிக்கவும்
யாரோ கண்ணீர்விடவும்
தானே தகவமைத்திடும்
ஐம்புலச் செயல்கள் எனதாயினும்
எள்ளளவும் அது நானாவதில்லை...
வடிவமைக்கப்பட்ட ஒழுங்கமைவில்
வட்டமடித்து சுற்றத் தெரிந்திடினும்
விருப்பப்பட்டுச் சிரிக்கும் சுதந்திரமில்லாதவள்
எப்படி நானாவேன்...?
கேள்வித் துருவலின்
மிச்சமில்லாத் துண்டுகளில்
கேட்கப்போவதில்லை
நான் யாரென்று நானே...!
#கனகா பாலன்
Comments