விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி
விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி :
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் தென்காசி மாவட்டம் முழுவதும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தீவிரமாக விழிப்புணர்வு செய்து வருகிறது.பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வாரமாக "கபசுர" குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை அறங்காவலர் வேல்சாமி அறிவுறுத்தலின்படி நிர்வாக அறங்காவலர் பார்த்திபன் தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுமார் 3000 துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுவரை 6850 நபர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது...கொரோனா விழிப்புணர்வு பணியில் விருட்சம் அறக்கட்டளை அறங்காவலர்கள் வேல்சாமி, சுப்பம்மாள் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோபிசங்கர், என்.எப்.எஸ் அறக்கட்டளை நிறுவனர் கோபி,
தன்னார்வலர்கள் பாலசுப்பிரமணியன், கலாராணி, கார்த்திக்,ரமேஸ்,இனிஸ் பரத்,மனோஜ் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்..
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை.
Comments