தென்னிந்தியாவில் தமிழகத்தில் மட்டும் கொரோனா அதிகமானதான் காரணம்
தமிழகத்தில் மட்டும் கொரோனா ஏன் அதிகமாக பரவுகிறது? நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் ஒன்றான சென்னை இங்கே இருப்பதால்.
தமிழகத்தில் கொரோனா பரவும் இந்த போக்கு (trend), நாட்டில் பெரு நகரங்களை கொண்ட மற்ற மாநிலங்களில் பரவும் போக்கை ஒட்டி இருக்கிறது. ஒத்துப்போகிறது.
நேற்றைய 20.05.2020 நிலவரப்படி இந்தியாவின் மொத்த COVID-19 கேஸ்களில் கிட்டத்தட்ட 55 சதவீதம் நமது எட்டு பெருநகரங்களில்தான் பதிவாகியுள்ளன.
நாட்டில் மொத்தம் 1,06,724 கோவிட்-19 கேஸ்கள், இதில் 3,303 மரணங்கள். நோய் கண்டயறியப் பட்டவர்களில் மரித்தவர்கள் சதவீதம் 3%.
இதில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி யூனியன் பிரதேசம் இந்த நான்கின் பங்கு மட்டும்: 72,278 கேஸ்கள் (67.72%), 2296 மரணங்கள் (69.10%)
இங்கெல்லாம் என்னதான் நடக்கிறது?
பாதிப்பில் மஹாராஷ்டிரா முதன்மை மாநிலம். ஏனென்றால் இதன் தலைநகரம் இந்தியாவின் மிகப்பெரிய மாநகரமான மும்பை .
மாநிலத்தில் மொத்தம் 37,136 கேஸ்கள், 1325 மரணங்கள் (இறப்பு சதவீதம் 4%)
தமிழகம் இரண்டாவது இடத்தில், தலைநகர் சென்னையால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது
மொத்தம் 12,448 கேஸ்கள். மரணங்கள் 84 (இறப்பு சதவீதம் 0.6%)
மூன்றாவது இடத்தில் குஜராத். இங்கும் தலைநகர் அகமதாபாத்தால் நிலைமை கட்டுமீறி போயுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 12,140 கேஸ்கள், அகமதாபாத் மட்டும் 9000+. மரணங்கள் 719 (இறப்பு சதவீதம் நாட்டில் மிக அதிகமான 6%)
நான்காவது டெல்லி யூனியன் பிரதேசம். தலைநகரம் டெல்லியால் இது கொலை நகரமாகிவிட்டது
அங்கே மொத்தம் 10,554 கேஸ்கள், 168 மரணங்கள் (இறப்பு சதவீதம் 1.6%)
இந்த தரவுகளின் அடிப்படையில் தெரியவரும் முக்கிய விஷயங்கள்:
- நாட்டின் மொத்த பாதிப்பில், இந்த மாநிலங்கள் மட்டுமே ஏறத்தாழ 70 சதவீதம் கேஸ்களை பதிந்துள்ளன.
- இந்த நான்கு பெருநகரங்களால்தான், அந்தந்த மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
- இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு (1994) இந்தியாவில் பிளேக் நோய் பாதிப்பை மாநில வாரியாக புள்ளிவிபரம் பார்த்தால் அப்பொழுதும் ஏறத்தாழ இதே ட்ரெண்ட்தான்.
- அந்த சமயத்திலும் பிளேக் நோயின் மையபுள்ளியான சூரத் நகரத்தை விட்டு இரண்டே நாட்களில் சுமார் மூன்று லட்சம் பேர் வெளியேறினார்கள்.
- இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு, பெருநகரங்களை தங்கள் தலைநகரங்களாக அமைத்துக் கொள்வதை மாநிலங்கள் மறு பரிசீலனை செய்யலாம்.
- அப்படியே இருந்தாலும் அதிகமான தொழிற்சாலைகளையும், புலம் பெயர் தொழிலாளர்களையும் பெருநகரங்களில் குவிப்பதை மட்டுமாவது தவிர்க்கலாம்.
- தமிழ்நாட்டில் தொழில்நகரங்கள் உள்ள மாநிலங்கள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாயிருப்பதை கீழே உள்ள படத்தில் காண்க. அனைத்து மாநிலங்களிலும் பொதுவான ட்ரெண்ட் இப்படித்தான்.
- எந்த கொள்ளை நோயையும் கட்டுப்படுத்த நாட்டின் தொழில்நகரங்கள் / பெரு நகரங்களில் மட்டும் உரிய நேரத்தில், தகுந்த நடவடிக்கையெடுத்தாலே போதும்.
உங்களுக்கு தெரிந்த அரசு மேல்உயர் மட்ட அதிகாரிகள் யாராவது இருந்தால் இந்த கடைசி பாய்ண்டை கொள்ளை நோய்க்கான பேரிடர் மேலாண்மையில் (Pandemic Disaster Management) முக்கியமானதென்று சொல்லுங்கள்.
கோயம்பேடு உட்பட தரவாரய்ச்சி பண்ணி மார்ச்சில் எழுதிப்போட்ட மடல் அரசாங்கத்தில் எங்கேயோ மேஜை மாறி போய்விட்டது.
திரு.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அலைபேசி எண்ணை யாராவது பகிர்ந்தால் சென்னைக்கான 10 அம்ச பேரிடர் மேலாண்மை திட்டம் ஒன்றை கோரா சார்பில் அவரிடம் இலவசமாக சமர்ப்பிக்கலாம்.
தரவுகள் அடிப்படையில் செய்த இந்த ஆராய்ச்சி உங்களுக்கு சரியென்று பட்டால், கீழுள்ள விசயங்களும் சரிதான்.
- நோயின் தாக்கத்தில் இந்தியா பாதி நிலையைத்தான் கடந்துள்ளது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
- இந்த நேரத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியது அடுத்த வரிசை நகரங்களில் / தொழில்நகரங்களில்
- பெங்களூரு, ஹைதராபாத் நகரங்கள் முதலில் பாதிப்புக்குள்ளானாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டன.
- நான்காவது பெருநகரம் கொல்கொத்தா? மேற்குவங்கத்தில் அம்மையாரின் நல்லாட்சியில் அரசு சொல்லும் எண்ணிக்கை அவ்வளவு தான்.
- இருந்தாலும் புனே, பெங்களூரு, கொல்கொத்தா, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், சூரத், நாக்பூர், கான்பூர்,லக்னோ, விசாகப்பட்டினம், போபால், பாட்னா போன்ற நகரங்களில் உடனடி கவனம் செலுத்தவேண்டும்.
- வரும் காலத்தில் கொள்ளை நோய்க்கான பேரிடர் மேலாண்மையில் முதலில் செய்யவேண்டியது, லாக்டவுனுக்கு முன்னால், பெரு நகரங்களை திறந்து விட்டு மக்கள் தொகையில் , புலம் பெயர் தொழிலாளர்களை வெளியேற்றி விட வேண்டும்.
- ஏனென்றால் முதல் லாக்டவுன் மார்ச் 24ல் அறிவித்த போது இந்தியாவின் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1987தான்.
- ஆனால் இந்த வாரம் முதல் வெளியேறி போகிறவர்கள், இந்த பெருநகரங்களின் பாதிப்பை தங்கள் சிற்றூர்களுக்கு எடுத்து சென்று விடக்கூடும். அப்படி ஒருவேளை நடந்தால் அது இந்தியாவின் பெரும் கொடும் கனவாக மாறி விடலாம்.
இதில் அரசை குறைசொல்லுவதில் இனி எந்த பயனுமில்லை. அனுபவம் தானே அரசுக்கும் நமக்கும் ஆசான்.
தகவல் உதவி
Comments