கொரோனா தடுப்பு முன் களப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் காவல்துறை மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு முன் களப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் காவல்துறை மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 300 நபர்களுக்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி திருத்துறைப்பூண்டி வட்ட கள மேலாளர் சிவா அவர்களின் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் இணைந்து இன்று அறுசுவை மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments