திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்தி ஊராட்சியில் கொரோனா வைரஸ் நிவாரண பணி
உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் AK. ராஜா மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் எடையூர் ஆரம்ப சுகாதார ஆய்வாளர், பணியாளர்கள் இணைந்து ஊராட்சி முழுவதும்( கொரோன வைரஸ்) கிருமிநாசினி தெளிக்கப்பட்டது, பணியில் ஈடுபட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்
Comments