மகளிர் தினம் திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்விராஜா தலைமை வகித்தார். பெண்களுக்கு நாடாளுமன்றங்களில், சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும், பாலின சமத்துவம், பெண்களுக்கான பாதுகாப்புசட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கு வருகிறது அதனை முறியடிக்க சபதம் ஏற்போம், 2020 ஆண்டிற்கான உறுப்பினர் பதிவை அதிகரிக்க வேண்டும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments