இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் தோழர் எஸ்.கவிதா அவர்கள் தலைமையில் நடந்தது .இந்தக் கூட்டத்தில் தோழர் எஸ். தமயந்தி மாவட்ட செயலாளரர் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்
. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலளர் தோழர் கே.பாலு அவர்கள் கலந்துக்கொண்டு சங்க அமைப்பை வழுபடுத்த ஆலோசனைகள் வழங்கினார்கள், மகளிர்தினம் மார்ச் 8 நிகழ்வுகள் குறித்தும் மாவட்ட குழுவில் எடுக்கின்ற முடிவினை நிறைவேற்ற முடிவு எடுத்ததோடு கிராமங்கள் தோறும் சங்க பேரவை அமைப்பை ஏற்படுத்தி பெயர் பலகை வைக்க வேண்டும். 2020ஆம் ஆண்டு உறுப்பினர் பதிவு 100% முடிக்க முயற்சி செய்ய வேண்டும் குடியுரிமைத்திருந்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், சென்னை to கரைக்குடி (திருத்துறைப்பூண்டி வழியாக) செல்லவேண்டிய இரயில் ,பணிகள் முடிந்தும்" கேட்கீப்பர்" பணிநியமனம் செய்யாததால் இரயில் பயணம் துவக்கம் தாமதம் ஏற்படுகிறது எனவே உடனடியாக பணி நியமனம் செய்து இரயிலை விட மத்திய அரசை கேட்டுஇக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றினர் சங்க ஒன்றிய செயலாளர் தோழர் சு.தமிழ்ச்செல்வி ராஜா அவர்கள் பெண்மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒன்றிய மாதர் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்துமரியாதை செய்யப்பட்டது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments