திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சாலைகளில் டேங்கர் லாரி மூலம் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் 144-தடை உத்தரவு பின்பற்ற நகர எல்லைகளில் போலீசார் கடுமையான சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியில் நகர பகுதிகளில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாள்தோறும் பணியாளர்களை கொண்டு கிரிமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது இன்று டேங்கர் லாரிகள் மூலம் நகர சாலைகளில் நகராட்சி பணியாளர்கள் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பொதுமக்களுக்கு நல்ல பாதுகாப்பும் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதே போல் நகர பகுதிகளில் இரவுபகலாக பணியாற்றும் போலீசாருக்கு நடமாடும் மருத்துவ குமுவினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை மேற்கொண்டுவருகின்றனர் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments