திருத்துறைப்பூண்டியில் தி மாடர்ன் நர்சரி பள்ளி,ஆனந்தம் கல்வி அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி
திருத்துறைப்பூண்டியில் தி மாடர்ன் நர்சரி பள்ளி,ஆனந்தம் கல்வி அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் துவக்கிவைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார், பள்ளி முதல்வர் தீபா ராணி வரவேற்றார், ஆனந்தம் அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார். இதில் ஆசிரியைகள் அபிராமி, வீரகுமாரி, திரிபுரசுந்தரி, கெளசல்யா, அகிலா, தனலெட்சுமி, திவ்யா, திவ்யபாரதி மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments