மைக் ரியான் உலக சுகாதார நிபுணர் கருத்து
வெறுமனே மாநிலங்களை, நகரங்களை முடக்குவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் உலக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.
லண்டன்
“கொரோனா நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, வைரஸ் உள்ளவர்கள், அவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களின் தொடர்பு களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல்தான் நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது.
நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் முடக்கப்படுவது தான் இப்போது ஆபத்து, வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லை என்றால், கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கப்பட்டது நீக்கப்படும் போது, நோய் மீண்டும் தீவிரமாக பரவும்.
நாம் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வைரஸை குறித்த ஆய்வை தொடர வேண்டும், வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும்.
பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் ஒன்று மட்டுமே அமெரிக்காவில் சோதனைகளைத் தொடங்கியது. மக்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். இது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு வருடமாவது ஆகும், தடுப்பூசிகள் வரும். ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க இப்போது செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்”
சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதி புதிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி யுள்ளன.
பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மற்றும் பள்ளிகள், பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
செ ஏ துரைபாண்டியன்
Comments