7-ம் வகுப்பு தேர்வு எழுத  தயாராகி வரும் 105 வயது மூதாட்டி

7-ம் வகுப்பு தேர்வு எழுத  தயாராகி வரும் 105 வயது மூதாட்டி


 


கேரளாவில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற .105 வயது மூதாட்டி, முதியோர் கல்வித் திட்டத்தில் சேர்ந்து 4-ம் நிலை தேர்வில் வெற்றி பெற்றார்.  அவர், அடுத்து 7-ம் வகுப்பு தேர்வு எழுத  விரும்பினார்.


 


இதற்காக, கேரள அரசின் முதியோர் கல்வி திட்ட இயக்குனர், மூதாட்டி பாகீரதி வீட்டிற்கு நேரில் சென்று  தேர்வு விண்ணப்பத்தை வழங்கினார்.  மூதாட்டியின் ஆர்வம் பற்றி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி தனது  மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.  உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பெண்மணிக்கான ஜனாதபதி விருது அறிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில் 7 – ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவது பற்றி மூதாட்டி கூறுகையில், 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன்.  தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.  வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுதுவேன் என்றார்.


தகவல் :


செ.ஏ. துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி