கே.பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினர்
தமிழகத்தைச் சேர்ந்த பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.ச்சநீதிமன்ற முன்னாள் வழக்கறிஞரும் ராமஜென்மபூமி வழக்கில் இந்துக்கள் தரப்பில் வாதாடியவருமான கே.பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள இவரின் வீடு ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமாகச் செயல்படும். ஸ்ரீரங்கத்தில் 1927- ம் ஆண்டு, பிறந்த பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான பராசரனின் மகன்கள் மோகன், சதீஷ், பாலாஜி ஆகியோரும் வழக்கறிஞர்களே. 1958- ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய இவர், 1980- ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் 1983- ம் ஆண்டு முதல் 89- ம் ஆண்டு வரை இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளா
Comments