திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தில் தஞ்சை ஆயர் பங்கு ஆய்வு விழா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தில் தஞ்சை ஆயர் பங்கு ஆய்வு விழா நடைபெற்றது.
தஞ்சை ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் தூய லூர்து அன்னை ஆலயத்தில் திவ்ய நற்கருணை செய்து புதிய கலையரங்கத்தை புனிதம் செய்துவைத்தார். கூட்டு பாடல், திருப்பலி செய்து குழந்தைகளுக்கு உறுதி பூசுதல் நடைபெற்றது.
இதில் மறைமாவட்ட வேந்தர் ஜான் சக்கரியாஸ், ஆயரின் செயலாளர் டோமினிக் சாமுவேல், பங்குதந்தைகள் ஜான் பிரிட்டோ, ரீகன் ஜெயக்குமார் மற்றும் கிராம இறைமக்கள், பங்கு மன்றம், பக்த சபையினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments