கவிதை .//கருமைக்கு பெருமை
- கவிதை பக்கம்
கருமைக்கு பெருமை
இருள் என்றால்
அனைவருக்கும் பயமே
கருமை என்றாலும்
ஒருவித தயக்கமே
காரிருள் மேகம் வரின்
போற்றுவோம் நாமே
நீரின்றி அமையாது உலகு என
பெருந்தகை வள்ளுவர் சொன்னனர்
நீரை சுமந்து வரும் மேகமோ
தேரில் வரும் தேவதையாய்
பாரில் உள்ள அனைவரின்
நீர் பசியை போக்குகின்றாள்
கருமைக்கு
பெருமை சேர்க்கிறாள் ..
#மனதின் ஓசைகள்
- மஞ்சுளா யுகேஷ்.
Comments